Published : 20 Jan 2020 07:58 AM
Last Updated : 20 Jan 2020 07:58 AM
அரியலூர் மாவட்டம் வெங்கிடகிருஷ்ணாபுரம் அருகேயுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொதுப்பள்ளியில் ஆண்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் நிறுவன தலைவர் எம்.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எம்.டி.சுமதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அவர் பேசும்போது கூறியதாவது:
நாளுக்கு நாள் நமது பண்பாடு, கலாச்சாரம் அழிந்துகொண்டு வருகிறது. இதற்கு பெற்றோர்களும் காரணம். நாம் பட்ட கஷ்டங்களை நமது பிள்ளைகள் படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்து, வாழ்க்கை என்றால் என்ன என்பதைச் சொல்லிக்கொடுக்க மறந்துவிடுகிறோம். இதனால் வாழ்க்கையில், சமுதாயத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்று பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை.
மாணவர்கள் கற்கும் கல்வியானது, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். செல்போனை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கலாச்சாரத்தை பேணிக் காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகள் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT