Published : 18 Jan 2020 06:14 PM
Last Updated : 18 Jan 2020 06:14 PM

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு: 9 பேர் சதம் எடுத்து சாதனை

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 9 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நாடு முழுவதும் 233 நகரங்கள் மற்றும் வெளிநாட்டில் ஜனவரி 7 - 9 வரை 6 கட்டமாக ஜேஇஇ மெயின் தேர்வு நடந்தது. 8.69 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். 6.04 லட்சம் மாணவர்கள், 2.64 லட்சம் மாணவிகள், 3 திருநங்கைகள் இத்தேர்வில் கலந்துகொண்டனர்.

ஜேஇஇ மெயின் தேர்வுக்காக 570 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 9 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். டெல்லி, குஜராத் மற்றும் ஹரியாணாவில் தலா ஒருவர், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் தலா இருவர் என 9 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படுகிறது. ஜேஇஇ மேல்நிலைத் தேர்வு (JEE- Advanced) ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஜேஇஇ மேல்நிலைத் தேர்வை எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x