Published : 11 Dec 2019 10:43 AM
Last Updated : 11 Dec 2019 10:43 AM
தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் பங்கேற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டி நேபாளத்தில் நடைபெற்றது. கடந்த 1-ம் தேதி தொடங்கிய இப்போட்டியில் இந்திய அணி 300-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று முதல் இடத்தைப் பிடித்தது. நேபாள அணி 2-வது இடத்தையும், இலங்கை அணி 3-வது இடத்தையும் பிடித்தது.
ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் தன்வர் வினோத் தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல் ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் சச்சினும், 75 கிலோ எடைப்பிரிவில் அங்கீத் கதாவும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT