Published : 28 Nov 2019 11:15 AM
Last Updated : 28 Nov 2019 11:15 AM

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி

கொடைக்கானலில் உள்ள நட்சத்திர வடிவிலான ஏரியை உருவாக்கியசர் ஹென்றி லெவின்ஜின் 200-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டி கள் நடத்தப்பட்டன.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் சர் ஹென்றி லெவின்ஜ். இவர் 1819-ம் ஆண்டு பிறந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தார்.

அவர், ஓய்வுக்காக கொடைக்கானல் வந்தபோது சிறிய குட்டைபோல் காட்சியளித்த பகுதியை நட்சத்திர வடிவிலான பெரிய ஏரியாக உருவாக்கினார்.

இன்று கொடைக்கானலின் அடையாளமாகவும், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழும் இடமாகவும் அந்த ஏரி மாறியிருக்கிறது. அந்த ஏரியை அமைத்தசர் ஹென்றி லெவின்ஜின் 200-வது பிறந்த நாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

சுற்றுலாத்துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட இவ்விழாவில் சர் ஹென்றி லெவின்ஜின் எள்ளுப்பேரன் நிக்லெவின்ஜ் பங்கேற்றார். விழாவின் முக்கிய அம்சமாக கொடைக்கானலில் உள்ள பள்ளி மாணவர்கள் ஏரியின் வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமாக கட்டுரை, பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x