Published : 19 Nov 2019 12:58 PM
Last Updated : 19 Nov 2019 12:58 PM
ஜெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருதப் பள்ளியில் முஸ்லிம் மாணவர்களே அதிகம் படிக்கின்றனர். ஆச்சரியப்படுத்தும் விதமாக மாணவர்களை விட மாணவிகளே இங்கு அதிகம் படிக்கின்றனர்.
10-ம் வகுப்பு வரை இயங்கும் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மொத்தம் 277. இதில் 222 பேர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் பள்ளியில் வேத சமஸ்திருத ஸ்லோகங்கள் தெளிவாகவும் சரியான உச்சரிப்போடும் கற்பிக்கப்படுகின்றன. இந்தியாவின் பழங்காலக் கல்வி முறையாக குருகுலம் பாணியை இந்த சமஸ்கிருதப் பள்ளி நினைவுபடுத்துகிறது.
அதேபோல இந்தப் பள்ளியில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் படிக்கின்றனர். இங்கு பிற பாடங்கள் கற்பிக்கப்பட்டாலும் பிரதானமாக சமஸ்கிருதம் பயிற்றுவிக்கப்படுகிறது.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வேத்நீதி சர்மா கூறும்போது, ''இங்கு படிக்க வரும் மாணவர்கள் சமஸ்கிருதத்தை அதிகம் விரும்புகின்றனர். பள்ளியில் போதிய இட வசதி உள்ளதால், இன்னும் மாணவர்கள் வந்தாலும் படிக்க முடியும்'' என்றார்.
முன்னதாக, இப்பள்ளிக்குச் சொந்தமாகக் கட்டிடம் இல்லாமல் இருந்தது. 2004-ல் சமஸ்கிருதம் படிக்க வரும் மாணவர்களின் ஆர்வத்தைப் பார்த்தார் ராஜா தாக்கூர் ஹரிசிங் மண்டாவா. உடனடியாக பள்ளிக்குச் சொந்தமாக நிலத்தை வழங்கினார். அதில் இருந்து சமஸ்கிருதப் பள்ளி, 'ராஜ்கியா தாக்கூர் ஹரிசிங் ஷேகாவாத் மண்டாவா சமஸ்கிருத வித்யாலாயா பள்ளி' என்று அழைக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT