Last Updated : 19 Nov, 2019 10:38 AM

 

Published : 19 Nov 2019 10:38 AM
Last Updated : 19 Nov 2019 10:38 AM

பயோ டாய்லெட் என்றால் என்ன?

கோப்புப்படம்

சுற்றுச் சூழலை சுகாதாரமாக பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டது தான் பயோ டாய்லெட். இவை காற்றழுத்த முறையில் செயல்படுபவை.

வழக்கமாக கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுகள், வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக் டேங்க்குகளில் சேகரிக்கப்பட்டு பின்னர் அப்புறப்படுத்தப்படும். நகரப்பகுதியாக இருந்தால் பாதாளசாக்கடையுடன் இணைக்கப்பட்டிருக்கும் குழாய்கள் வழியாக வெளியேற்றப்படும்.

இவை முழுவதுமாக மக்கிப்போகாது. இதனால் குழாய்களில் சில சமயங்களில் அடைப்பு ஏற்பட்டு சிக்கலை உண்டாக்கும்.

ஆனால், இந்த பயோ டாய்லெட்கள், நுண்ணுயிரிகளின் செயல்பாட்டால் மனித கழிவுகள் 99 சதவீதம் மக்கச் செய்து பயோ வாயுவாக வெளியேற்றும். இதில் நாற்றம் இருக்காது.

இதை எரிசக்தியாகவும் பயன்படுத்தலாம். பயோ டாய்லெட்டுகளால் தண்ணீர் பயன்பாடும் குறையும். இதுபோன்ற கழிப்பறைகள், தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x