Published : 16 Nov 2019 11:51 AM
Last Updated : 16 Nov 2019 11:51 AM

ஆராய்ச்சி படிப்புக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தி உத்தரவு

இளநிலை ஆராய்ச்சி படிப்புக் கான கல்வி உதவித்தொகை உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய தகுதித்தேர்வில் (நெட்) தேர்ச்சி பெறும் ஆராய்ச்சி பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஆராய்ச்சி படிப்புக்கான உதவித் தொகையை உயர்த்த மாண வர்கள் கோரிவந்தனர்.

அதையேற்று, இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான கல்வி உதவித்தொகை முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.31 ஆயிரமும், மூன்றாம் ஆண்டு முதல் மாதம் ரூ.35 ஆயிரமும் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்குமுன் கல்வி உதவித் தொகை முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.25 ஆயிரமும், 3-ம் ஆண்டில் மாதம் ரூ.28 ஆயிர மும் வழங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x