Published : 16 Nov 2019 08:31 AM
Last Updated : 16 Nov 2019 08:31 AM

அஞ்சல் துறை சார்பில் பேச்சுப் போட்டி

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சென்னையில் அஞ்சல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை நகர மண்டல அஞ்சல் அலுவலக உதவி இயக்குநர் ஆர்.பாலச்சந்தர், அண்ணாசாலை தலைமை அஞ்சலக தலைமை அதிகாரி வீ.கனகராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

சென்னை

சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் உள்ள சிறப்பு தபால்தலை மையத்தில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ‘தபால்தலைகள் மீது குழந்தைகளுக்கு உள்ள ஈடுபாடு’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடந்தது.

இதில் தொடக்கப் பள்ளிகள் பிரி வில் சான் அகாடமி பள்ளி மாணவர் கார்த்திக் சிவகுமார் முதல் பரிசை யும் புதுப்பேட்டை ஆர்பிஏஎன்சி பள்ளி மாணவி பி.ஹர்சினி 2-ம் பரிசையும் புதுவண்ணாரப்பேட்டை ஸ்டெல்லா மேரீஸ் பள்ளி மாணவி வி.நேத்ரா 3-ம் பரிசையும் பெற்றனர்.

உயர் நிலைப் பள்ளிகள் பிரி வில் நங்கநல்லூர் செல்லம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி ஹரிணி நாராயணன் முதல் பரிசை யும் வன்னிய தேனாம்பேட்டை சென்னை உயர் நிலைப் பள்ளி மாணவர் பி.யஷ்வந்த் 2-ம் பரிசையும் செம்பியம் கேஆர்எம் பொதுப் பள்ளி மாணவி கே.ஹரிணி 3-ம் பரிசையும் வென்றனர்.

சென்னை நகர மண்டல அஞ் சல் அலுவலகத்தின் உதவி இயக்கு நர் ஆர்.பாலச்சந்தர், அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தின் தலைமை அதிகாரி வீ.கனகராஜன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். அஞ்சல்துறை வெளி யிட்டுள்ள செய்திக் குறிப் பில் இத்தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x