அரசு பள்ளிக்கு வகுப்பறை கட்டிக் கொடுத்த கிராம மக்கள்

அரசு பள்ளிக்கு வகுப்பறை கட்டிக் கொடுத்த கிராம மக்கள்
Updated on
1 min read

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பழையூர்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 1954முதல் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இது தற்போது நடுநிலைப் பள்ளியாகத்தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஓட்டுக்கூரை கட்டிடங்கள் சேதமடைந்ததால் மாணவர்கள் அச்சத்துடன் படித்து வந்தனர். வகுப்பறைக்கு புதிய கட்டிடங்கள் கட்டித்தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை அறிந்த இக்கிராம இளைஞர்கள், வெளிநாட்டில் வேலைபார்க்கும் இளைஞர்கள், கிராமத்தினர் ஆகியோர் சேர்ந்து ரூ. 7 லட்சம் திரட்டினர். அந்தப் பணத்தில் பள்ளி வளாகத்திலேயே இரண்டு வகுப்பறைகளை அடங்கிய புதிய கட்டிடத்தை கட்டிக் கொடுத்தனர். புதிய வகுப்பறைகள் கட்டித்தந்ததற்காக கிராம மக்களுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in