Published : 13 Nov 2019 08:36 AM
Last Updated : 13 Nov 2019 08:36 AM
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டிஇம்மாதம் 22-ம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. இப்போட்டியை பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களான மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, அஜிங்க்ய ரஹானே, சேதேஷ்வர் புஜாரா உள்ளிட்டோர் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ராகுல் திராவிட்டின் மேற்பார்வையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பகலிரவு டெஸ்ட் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேதேஷ்வர் புஜாரா, “பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது அந்தி நேரத்தில் பந்தைப் பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். இந்த நேரத்தில் சரியக ஆடிவிட்டால் போட்டியை வென்று விடலாம். துலீப் டிராபிக்கான போட்டியின்போது நான் ஏற்கெனவே பிங்க் நிற பந்தில் பகலிரவு போட்டியில் ஆடியுள்ளேன். அந்த அனுபவம் எனக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறேன்” என்றார். -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!