Published : 08 Nov 2019 11:40 AM
Last Updated : 08 Nov 2019 11:40 AM

இந்திய ராணுவ அகாடமியைப் பார்வையிட்ட காஷ்மீர் பள்ளி மாணவர்கள்

டேராடூன்

காஷ்மீர் பள்ளி மாணவர்கள் 20 பேர், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியை நேற்று பார்வையிட்டனர்.

இந்திய ராணுவத்தின் முன்னெடுப்புகளில் ஒன்றான ஆபரேஷன் சத்பாவ்னா, 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்படி காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் தீவிரவாதப் பாதையைத் தேர்ந்தெடுக்காமல் தவிர்க்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக காஷ்மீர் மக்களுக்கான கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உதவி, இளைஞர் வேலைவாய்ப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், கல்வி சுற்றுப்பயணம், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆபரேஷன் சத்பாவ்னாவின் கீழ், காஷ்மீரில் உள்ள பாரமுல்லா பகுதியில் படிக்கும் 13- 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் உத்தரகாண்டில் உள்ள இந்திய ராணுவ அகாடமிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நம் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள், இந்திய ராணுவத்தைக் குறித்து அறிந்து கொள்வதற்கான நல்ல வாய்ப்பை, இந்தப் பயணம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ராணுவ அகாடமியின் லெஃப்டினென்ட் ஜெனரல் எஸ்கே ஷாவுடன் மாணவர்கள் கலந்துரையாடினர். இந்தப் பயணத்தால் ஏராளமான சிறுவர்கள் உத்வேகம் அடைந்தனர். நிறையப் பேர் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காகச் சேவை செய்ய விருப்பம் தெரிவித்தனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x