Published : 24 Oct 2019 10:29 AM
Last Updated : 24 Oct 2019 10:29 AM
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூரில் உள்ளது அரசு தொடக்கப்பள்ளி. இப்பள்ளியில் அம்மையநாயக்கனூரை சுற்றியுள்ள கிராமங்களான கொடைரோடு, சிறுமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். தற்போது மழைக் காலம் என்பதால் மாணவர்கள் பள்ளிக்கு நடந்துவரும் நேரத்தில் மழை பெய்வதால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதை அறிந்த அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், தொழில் முனைவோருமான விஜயகுமார் பள்ளிக்கு வரும் 50 குழந்தைகளுக்கு குடைகள் வாங்கிக்கொடுக்க முடிவு செய்தார். 50 குடைகளை வாங்கிக்கொண்டு பள்ளிக்கு சென்ற விஜயகுமார், பள்ளி தலைமையாசிரியர் ஆர்தர் அனுமதியுடன் குழந்தைகளுக்கு வண்ணமயமான குடைகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். முன்னாள் மாணவர் விஜயகுமாரின் இந்த செயலை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT