Published : 24 Oct 2019 09:29 AM
Last Updated : 24 Oct 2019 09:29 AM
லக்னோ
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,சுற்றுச்சூழலைப் பாதிக்காத பட்டாசுகளை மட்டும் வெடிக்க உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 27-ம்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஏற்கெனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பட்டாசுகள் வெடிப்பதால் ஒலி மற்றும் காற்று மாசுபாடு அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இதை தடுக்க உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஒலிகுறைவான, புகை குறைவாக வெளியிடும் பசுமை பட்டாசுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்றுவிழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சுற்றுச்சூழலைப் பாதிக்காத பட்டாசுகளை மட்டும் தீபாவளி பண்டிகைக்கு வெடிக்க வேண்டும் என்று உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உ.பி. அரசு நேற்று வெளியிட்ட ஆணையில் கூறப்பட்டுள்ளது.
தீபாவளியின் போது சுற்றுச்சூழலைப் பாதிக்காத பட்டாசுகளை மட்டும் வெடிக்க வேண்டும். அதுவும் இரவு 8 மணி முதல் 2 மணி நேரத்துக்கு மட்டுமே பட்டாசுகள் வெடிக்கவேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் இருந்து மட்டும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத பட்டாசுகளை பொதுமக்கள் வாங்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் மூலம் பட்டாசுகள் வாங்க வேண்டாம் என்று உ.பி. பொது மக்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பட்டாசுகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்
யும்படி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு உத்தரபிரதேச அரசுவெளியிட்ட ஆணையில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT