Published : 24 Oct 2019 09:16 AM
Last Updated : 24 Oct 2019 09:16 AM
முன்பு உலகம் முழுவதும் அதிகமாக குழந்தைகளை பாதித்த நோய் இளம்பிள்ளை வாதம் (போலியோ). இந்த நோயை உருவாக்கும் வைரசை போலியோ என்று அழைக்கின்றனர். இது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது.
போலியோ வைரஸ் மூளை, நரம்பு மண்டலம் போன்ற பிரதான உறுப்புகளை தாக்கக் கூடியது. மேலும் முதுகுத் தண்டு நரம்புகள், தலை நரம்புகளை செயலிழக்கச் செய்கின்றன. நரம்புகளில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக கை, கால்கள் வளர்ச்சி குறைந்து, நடக்க முடியாமலும் (இளம்பிள்ளை வாதம்) போகிறது.
இன்று போலியோ பெருமளவு கட்டுபாட்டுக்குள் வந்துவிட்டது. இதற்கு முதன்முதலாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் மருத்துவர் ஜோனஸ் சால்க். இவரது நினைவாக உலக இளம்பிள்ளை வாத தினம் அக்டோபர் 24-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT