Published : 23 Oct 2019 12:29 PM
Last Updated : 23 Oct 2019 12:29 PM
சென்னை
பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி நாடு முழுவதும் அக். 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதன்படி, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சில வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பட்டாசு வெடிக்கும்போது மாணவர்கள் தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் டெரிலின், டெரி காட்டன் உள்ளிட்ட உடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
பட்டாசுகளை வெடிக்கும்போது, அருகிலேயே தண்ணீர் வைத்துக்கொள்ள வேண்டும். பறவைகள், பிராணிகள், விலங்குகளைத் துன்புறுத்தும் வகையில் அவற்றின் அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். அதேபோல அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT