Published : 23 Oct 2019 07:57 AM
Last Updated : 23 Oct 2019 07:57 AM
துரின்
கால்பந்து போட்டிகளில் இருந்து இப்போதைக்கு ஓய்வுபெற மாட்டேன் என்று பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.
உலகின் பிரபல கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டுவீரரான இவர், ஜுவண்டஸ் கால்பந்துகிளப்புக்காகவும் ஆடி வருகிறார். 34 வயதான இவர் சமீபத்தில் 700-வது கோலை அடித்து சாதனை படைத்தார். இந்நிலையில் கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வுபெறப் பொவதாக தகவல்கள் வெளியாகின. இந்ததகவலை ரொனால்டோ மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் கூறிய ரொனால்டோ, “வயது என்பதை வெறும் ஒரு எண்ணாகவே நான் பார்க்கிறேன். இப்போதைக்கு கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இல்லை. நான் சிறப்பாக ஆடும் காலம் வரை கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து ஆடுவேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT