Published : 23 Oct 2019 07:36 AM
Last Updated : 23 Oct 2019 07:36 AM

கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 20 செ.மீ. மழை

திருவனந்தபுரம்

தென்மேற்குப் பருவமழை முடிந்து, தமிழகத்தில் கடந்த 17-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. அதன்பின், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால், கேரளாவின் பல இடங்களில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கொச்சியில் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்ததால் கொச்சியில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதுபோலவே ஆலப்புழா, கோட்டயம், உட்பட பிற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இங்கு 24 மணிநேரத்தில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்தநிலையில் கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் உட்பட மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் சிவப்பு நிற எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x