Published : 23 Oct 2019 07:15 AM
Last Updated : 23 Oct 2019 07:15 AM
ஜெய்ப்பூர்
மருத்துவ மேற்சிகிச்சைக்காக ராஜஸ்தானில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மும்பைக்கு செல்கின்றனர். அவ்வாறு சிகிச்சைக்கு செல்லும் மக்கள்,மும்பையில் தங்கும் வசதி, உணவு போன்ற அத்தியாவசிய வசதிகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும்,அதற்கு மிக அதிக தொகையை செலவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக மும்பை செல்லும் ராஜஸ்தானியருக்கு மாநில அரசு உணவு மற்றும் தங்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் என்று முதல்வர் அஷோக் கெலாட் அறிவித்துள்ளார். -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT