Published : 20 Oct 2019 08:39 AM
Last Updated : 20 Oct 2019 08:39 AM

21 அரசு பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

சென்னை

தொண்டு நிறுவனங்கள் உதவி யுடன் 21 அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

அமெரிக்க - இந்திய அறக் கட்டளை, எல் அண்ட் டி நிறுவனம் ஆகியவை சார்பில் 21 அரசுப்பள்ளிகளுக்கு மடிக் கணினி மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் பங்கேற்று பேசியதாவது:

ஆசிரியர்கள் பாடங்களை கற்று தரும்போது அதனுடன் தொடர்புடைய அம்சங்கள் குறித் தும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும். புதிய தகவல்களை தேடும் மாணவர்களுக்கு வழி காட்ட வேண்டும். இதன்மூலம் அவர்களிடம் இருக்கும் படைப் பாற்றலை வெளிப்படுத்தி அறிவுத்திறனையும் மேம்படுத்த முடியும்.

மேலும், அப்துல்கலாம் போன்ற விஞ்ஞானிகள் அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்படுவார்கள்.

கணினி ஆய்வகங்கள்

இதுதவிர அரசுப்பள்ளி மாணவர்கள் கண்டுபிடிப்புகள் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு பயன்படுவதாக இருக்கும். தமிழகத்தில் 6,027 அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப வசதிகளு டன் கணினி ஆய்வகங்கள் அமைக் கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த 21 அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கும் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அறிவியல், பொறியியல், கணிதம் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மாதம் 4 நாட்கள் வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட உள்ளன. ஆராய்ச்சி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x