Published : 14 Oct 2019 11:13 AM
Last Updated : 14 Oct 2019 11:13 AM
உலன் உடே
ரஷ்யாவில் உள்ள உலன் உடே நகரில் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 48 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனையான மஞ்சு ராணி, ரஷ்யாவின் எகடெரினா பால்ட்சேவாவை எதிர்த்து மோதினார்.
இப்போட்டியில் மஞ்சு ராணி, 1-4 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார். இறுதிப் போட்டியில் தோற்றபோதிலும், மஞ்சு ராணிக்கு இதில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT