Published : 14 Oct 2019 10:03 AM
Last Updated : 14 Oct 2019 10:03 AM
டெல்லி
தேசிய குடும் பநலத் துறையின் கணக்கெடுப்பு - 4 (என்எப்எச்எஸ்-4) சார்பில் ஊட்டச்சத்து தொடர்பாக ஒரு ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த ஆராய்ச்சியில், ஊட்டச்சத்து குறைவு காரணமாக இந்தியாவில் உள்ள 38.4 சதவீத குழந்தைகள் உயரம் குறைவாகவும், 21 சதவீத குழந்தைகள் உயரம், எடை குறைவாகவும் இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையில், ஊட்டச்சத்து குறைவை போக்க, இயற்கை வேளாண்மையை கொண்டு, “போஷன் வத்திகா” திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இயற்கை தோட்டங்கள் மூலம் விளையும் காய்கறி, பழவகைகளை அங்கன்வாடிகளுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “வேளாண் விஞ்ஞானிகளை கொண்டு, ஊட்டச்சத்து குறித்து ஆராய்ச்சி செய்ய உள்ளோம். அவ்வாறு கண்டறியும் ஊட்டச்சத்து காய்
கறிகளை, போஷன் வத்திகா தோட்டத்தின் மூலம் விளைய வைத்து, குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம், ஊட்டச்சத்தின்மையில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும். இந்த திட்டத்தை எல்லா மாநில அரசு வழியாக செயல் படுத்தினால், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT