Published : 10 Oct 2019 08:48 AM
Last Updated : 10 Oct 2019 08:48 AM

நூலகங்களை பயன்படுத்தி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்: உத்தரகாண்ட் மாநில பள்ளிக் கல்விச் செயலர் அறிவுரை

திருவில்லிபுத்தூரில் இந்து மேல்நிலைப் பள்ளிகளின் முப்பெரும் விழாவில் பேசினார் டாக்டர் ஆர். மீனாட்சிசுந்தரம் ஐஏஎஸ்.

திருவில்லிபுத்தூர்

நூலகங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரகாண்ட் மாநில பள்ளிக் கல்வித்துறை செயலர் மீனாட்சிசுந்தரம் ஐஏஎஸ் பேசினார். திருவில்லிபுத்தூர் இந்து மேல்நிலைப் பள்ளிகளின் கலைவிழா, 137-வது ஆண்டு விழா மற்றும் பெற்றோர் சங்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றன. பள்ளிச் செயலர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளித் தலைவர் மலையன் முன்னிலை வகித்தார். முன்னதாக தலைமை ஆசிரியர் கண்ணன் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் உத்தரகாண்ட் மாநில பள்ளிக் கல்வித்துறை செயலரும், குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவருமான டாக்டர் ஆர். மீனாட்சிசுந்தரம் ஐஏஎஸ் கலந்து கொண்டு பேசியதாவது:

மாணவர்கள் கல்வியோடு, ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். படிப்பு மட்டுமல்லாது நூலகங்களுக்குச் செல்லும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், நீங்கள் நூலகத்தின் படிக்கட்டுகளை மிதித்து மேலே செல்லும் போது, உங்கள் வாழ்க்கையிலும் உயர்ந்து வருகிறீர்கள் என்பது உண்மையாகும்.

நான் படிக்கும்போது நமது நகரிலுள்ள பாரம்பரிய பென்னிங்டன் நூலகத்துக்கு தினமும் சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதனால் தான் நான் வாழ்க்கையில் உயர்ந்தேன். நீங்களும் புத்தகங்களை வாசிப்பதை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x