Published : 10 Oct 2019 08:02 AM
Last Updated : 10 Oct 2019 08:02 AM
ஒரு சமூகத்தில், பெரும் மக்கள் கூட்டம் இருக்கும் இடத்தில் குற்றங்கள் நடப்பது தவிர்க்க இயலாது. ஓவ்வொரு நாட்டிலும் அதன் சட்டத்துக்கு ஏற்ப குற்றங்கள் வரையறுக்கப்படுகின்றன.
சிலர் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு குற்ற செயலில் ஈடுபடுவதால் அதற்கான தண்டனையும் வழங்கப்படுகிறது. தண்டனைகளில் மிகவும் கொடூரமானது மரண தண்டனை.
பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. இந்த தண்டனையை வழங்கிக் கொண்டிருக்கும் இன்னும் சில நாடுகளும் இதை தடை செய்ய வேண்டும்.
உலகம் முழுவதும் இதை பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும் எனும் நோக்கில் அக்டோபர் 10-ம் நாள் ‘உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT