Published : 09 Oct 2019 02:04 PM
Last Updated : 09 Oct 2019 02:04 PM

தீபாவளியை மகிழ்வுடன் கொண்டாட பள்ளிக்கூடங்களுக்கு ஒருநாள் விடுப்பு: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

சென்னை

தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட, அரசு ஒருநாள் விடுப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்த வருட தீபாவளி வரும் 27.10.2019 அன்று ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. பெரும்பாலும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் வேலை செய்வதில்லை. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல கிலோ மீட்டர் தொலைவில் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஆசிரியர்கள் அனைவரும் தீபாவளி நாளைக் கொண்டாடிவிட்டு, அன்றே வெளியூரில் இருந்து பணிக்குத் திரும்புவது மிகவும் சிரமத்தை ஏற்படுத்துவதோடு மன உளைச்சலையும் உண்டாக்கும்.

தீபாவளி நன்னாளை குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் தீபாவளிக்கு மறு நாளான திங்கள் கிழமையினை விடுமுறை நாளாக அறிவிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் 28.10.2019 திங்கள் கிழமை விடுமுறை விடுவதை ஈடு செய்ய, அரசு அறிவிக்கும் ஏதாவது ஒரு விடுமுறை நாளான சனிக்கிழமையன்று பணிபுரிந்து ஈடு செய்து விடுவோம்.

எனவே பள்ளிக் கல்வித்துறையும் அரசும் பரிசீலித்து தீபாவளி மறுநாள் 28.10.2019 அன்று விடுப்பு வழங்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x