Published : 09 Oct 2019 11:06 AM
Last Updated : 09 Oct 2019 11:06 AM

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அக்.14 முதல் பணியிடை பயிற்சி

பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் (எஸ்எஸ்ஏ) மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்கப்படுகிறது.

அண்மையில் 100 தலைமை ஆசிரியர்கள் உட்பட 600 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 5 நாள் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் ‘நிஷ்தா’ பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அதன்படி அக்டோபர். 14 முதல் 20-ம் தேதி வரை 5 பிரிவுகளாக பயிற்சி நடத்தப்பட வேண்டும். இதற்காக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) உருவாக்கியுள்ள கையேடுகள் பள்ளிக்கல்வித் துறையால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

செல்போன் செயலிநிஷ்தா பயிற்சிக்கென nishtha.ncert.gov.in என்ற இணையதளமும், பிரத்யேக செல்போன் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள பாடத்திட்டங்களை பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

எனவே, அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x