Published : 09 Oct 2019 09:49 AM
Last Updated : 09 Oct 2019 09:49 AM

அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் பங்களா சாகிப் குருத்வாராவில் தடை

புதுடெல்லி

மாணவர்களே, இந்தியாவின் தலைநகர் டெல்லியில், சீக்கியர்களின் பங்களா சாகிப் குருத்வாரா உள்ளது. குருத்வாராக்களில் இது மிகப்பெரியது. இங்கு ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமின்றி அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுத் தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா நேற்று கூறும்போது, ‘‘குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பங்களா சாகிப் குருத்வாராவில் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், ஸ்பூன்கள் உட்பட அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மாற்றாக அக்டோபர் 2-ம் தேதி முதல் சுற்றுச்சூழலை பாதிக்காத சணல், தாவர இலைகள் மூலம் தயாரிக்கப்பட்ட தட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன’’ என்றார்.

தவிர இங்கு நிலக்கரி, மரக்கட்டைகள் எரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்களே நீங்களும் உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இது போல் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருக்க முயற்சி செய்து பாருங்கள்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x