Published : 09 Oct 2019 08:49 AM
Last Updated : 09 Oct 2019 08:49 AM

கேதார்நாத் பத்ரிநாத் கோயில் நடைகள்  6 மாதங்கள் அடைப்பு

கேதார்நாத் கோயில்

கேதார்நாத்

கேதார்நாத் கோயிலில் வரும் 29-ம் தேதியில் இருந்தும் பத்ரிநாத் கோயிலில் நவம்பர் 17-ம் தேதியில் இருந்து நடை அடைக்கப்படுகிறது.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்கள் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் இருந்து 6 மாதங்கள் திறந்திருக்கும். பின்னர், கடும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் 6 மாதங்களுக்கு கோயில் மூடப்பட்டிருக்கும். அதன்படி, இந்த ஆண்டு கடந்த 6 மாதங்களாக கோயில்கள் திறக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பனிக்காலத்தை முன்னிட்டு கேதார்நாத் கோயிலில் வரும் 29-ம் தேதி முதல் நடை அடைக்கப்படுகிறது. இதேபோல, பத்ரிநாத் கோயிலில் நவம்பர் 17-ம் தேதி முதல் கோயில் நடை சாத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x