Published : 09 Oct 2019 08:49 AM
Last Updated : 09 Oct 2019 08:49 AM

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் கால் இறுதியில் மேரி கோம்

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் மேரி கோம் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதே வேளையில் 75 கிலோ எடைப்பிரிவில் சவீதி போரா 2-வது சுற்றில் தோல்வியடைந்தார்.

ரஷ்யாவின் உலான் உடே நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் 2-வது சுற்றில் தாய்லாந்தின் ஜூட்மாஸ் ஜிட்பொங்கை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால் பதித்தார்.

போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள 36 வயதான மேரி கோம் முதல் 3 நிமிடங்கள் வரை பொறுமையாக ஜிட்பொங்கின் தாக்குதல் பாணியை நன்கு கவனித்த நிலையில் அதன் பின்னர் அதிரடியாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினார்.

75 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சவீதி போரா, கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் வேல்ஷ் நாட்டின் லாரன் பிரைஸை எதிர்த்து விளையாடினார். இதில் சவீதி போரா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x