Published : 09 Oct 2019 08:40 AM
Last Updated : 09 Oct 2019 08:40 AM

விவசாயத்துக்காக வைகை அணை இன்று திறப்பு

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த ஆண்டு கடந்த ஜூனில் பெய்யும் தென்மேற்குப் பருவமழை தாமதமாக ஆகஸ்டில் பெய்யத் தொடங்கியது. இருப்பினும் தொடர்ந்து கன மழை பெய்ததால் பெரியாறு அணைக்கு குறுகிய நாட்களிலேயே நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 131 அடி வரை உயர்ந்தது.

விநாடிக்கு 1400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த மூல வைகையில் நீரோட்டம் ஏற்பட்டு வைகை அணை நீர்மட்ட ம் உயரத் தொடங்கியது.

விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன்மூலம் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பயன் அடையும். தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x