Published : 08 Oct 2019 05:18 PM
Last Updated : 08 Oct 2019 05:18 PM

நாக்பூரில் 12-ல் தூக்கமின்மை சர்வதேச மாநாடு

நாக்பூர்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், வரும் 12-ம் தேதி தூக்கமின்மை கோளாறு தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெறுகிறது.

இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இலங்கை உட்பட பல்வேறு நாட்டு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தூக்கமின்மைக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். நிம்மதியாக தூங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைக்க உள்ளனர்.

நல்ல உடல்நலத்துக்கு தூக்கம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. போதிய அளவுக்கு தூங்குவது மனநிலை, உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x