Published : 07 Oct 2019 06:12 PM
Last Updated : 07 Oct 2019 06:12 PM

ஆட்டோ, கார் ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 ஆந்திர முதல்வர் ஜெகன்  அறிவிப்பு

எலூரு

ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வராகவும் பதவி வகிக்கிறார். இவர் பதவியேற்ற பிறகு பல்வேறு நலத்திட்டங்களை உடனடியாக அமல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், ஆந்திராவில் ஆட்டோ, கார் ஓட்டி சுயதொழில் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். ‘ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா’ என்ற பெயரில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் சொந்தமாக ஆட்டோ, கார் வைத்துள்ள 1 லட்சத்து 73 ஆயிரத்து 102 பேர் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. வாகன இன்சூரன்ஸ், சாலை வரி உட்பட சிலவித அரசு கட்டணங்களுக்கு இதை அவர்கள் பயன்படுத்த உதவியாக இருக்கும்.

இந்த உதவித்தொகை 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் கூறியுள்ளார். இதனால் ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல், விவசாயிகளுக்கு தலா ரூ.12,000 வழங்கும் திட்டத்தையும் அவர் அறிவித்தார். அண்மையில் ஆந்திராவில் ஒரே நாளில் 1 லட்சத்து 26,728 பேருக்கு அரசுப் பணி வழங்கி முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x