Published : 07 Oct 2019 06:12 PM
Last Updated : 07 Oct 2019 06:12 PM
புதுடெல்லி
நாடு முழுவதும் உள்ள 720 ரயில் நிலையங்களில் தூய்மையான ரயில் நிலையங்கள் மற்றும் அசுத்தமான ரயில் நிலையங்களில் முதல் 10 இடங்களை பிடித்த ரயில் நிலையங்களை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாட்டிலேயே மிகவும் மோசமான நிலையில் அசுத்தமாகக் காணப்படும் பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழக ரயில் நிலையங்களே 6 இடங்களைப் பெற்றுள்ளன. சென்னை பெருங்களத்தூர் முதலிடத்தையும், கிண்டி 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. டெல்லி சடார் பஜார், மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
சென்னை வேளச்சேரி, கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், பழவந்தாங்கல், கேரள மாநிலம் ஒட்டப்பாலம், பிஹாரைச் சேர்ந்த அராரியா கோர்ட், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த குர்ஜா ஆகியவையும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
சுத்தமான ரயில் நிலையங் களில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர், ஜோத்பூர், துர்காபுரா ஆகிய ரயில் நிலையங்கள் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT