Published : 07 Oct 2019 06:13 PM
Last Updated : 07 Oct 2019 06:13 PM

டெல்லி எய்ம்ஸ், ஜிப்மர் கல்லூரிகளிலும் ‘நீட்’ அடிப்படையில் எம்பிபிஎஸ் சேர்க்கை

புதுடெல்லி

‘‘டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளிலும், வரும் 2020-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்’’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்துள்
ளார்.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் அவர்கள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை சேர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், 2020-ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இனிமேல் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். இதன் மூலம் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரியின் தரம் உயரும் என்று அமைச்சர் தெரிவித்தார்.


- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x