Published : 07 Oct 2019 06:13 PM
Last Updated : 07 Oct 2019 06:13 PM
புதுடெல்லி
அடுத்த ஆண்டுக் கான ஹஜ் யாத்திரைக்கு அக்டோபர் 10-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் ஹஜ் யாத்திரை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
பின்னர், முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது: அடுத்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் பற்றி ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் வெளியுறவு, விமானப் போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஹஜ் யாத்திரைக்கு அக்டோபர் 10-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும்.
இந்தியாவில் இருந்து அடுத்த ஆண்டு 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்வார்கள்.நாடு முழுவதும் 22 இடங்களில் இருந்து ஹஜ் பயணிகள் புறப்பட ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT