Published : 07 Oct 2019 06:10 PM
Last Updated : 07 Oct 2019 06:10 PM

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 அடுத்த ஆண்டு பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தில் எழுதலாம்

சென்னை

அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷா ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2020-ம் ஆண்டு மார்ச் பருவம் முதல் நடத்தப்படும் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்படி மட்டுமே நடத்தப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பழைய பாடத்திடத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்களுக்கு பழைய பாடத்திட்டத்திலேயே மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு அளிக்குமாறு அரசு தேர்வுத்துறைக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.

இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, ஏற்கெனவே பழைய பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்களுக்காக 2020 மார்ச் மற்றும் ஜூன் பருவங்களில் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வுகள் நடத்த தற்போது அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, ஏற்கெனவே, 10-ம் வகுப்பு, பிளஸ் 1 பிளஸ் 2 தேர்வர்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டு மார்ச், ஜூன் ஆகிய இரு பருவங்களில் பழைய பாடத்திட்டத்தில் (பிளஸ் 2-வுக்கு 600 மதிப்பெண்) பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்.

.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x