Published : 07 Oct 2019 06:10 PM
Last Updated : 07 Oct 2019 06:10 PM
சென்னை
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளதால், பள்ளிகளில் முப்பருவ தேர்வுமுறை ரத்து செய்யப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளித்தார்.
தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் 3-ம் தேதி திறக்கப்பட்டன. அன்றைய தினம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு 2-ம் பருவத்துக்குரிய பாடப்புத்தகங்கள், இலவச நோட்டுகள் வழங்கப்பட்டன. பிளஸ் 2 மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களுக்குரிய 2-ம் பகுதி புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இதற்கிடையே, 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுவருவதால் முப்பருவ முறை ரத்து செய்யப்படுமா என்பது குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதில் முதல் 3 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுதினாலும் அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் தமிழகத்தில் மட்டும் விதிவிலக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதனால் முதல் 3 ஆண்டுகளில் தோல்வி என்பது யாருக்கும் ஏற்படாது. 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் உள்ள தேர்வுகளில் அடுத்த 3 ஆண்டுகளில் அனைவரும் தேர்ச்சி பெறுவர். பொதுத்தேர்வெழுதும் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிக்கு அருகிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட இருப்ப தால், தற்போது நடைமுறையில் உள்ள முப்பருவ தேர்வு முறையை ரத்து செய்வது குறித்துகல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT