Published : 12 Jul 2023 04:12 AM
Last Updated : 12 Jul 2023 04:12 AM

தெருநாய்கள் தொல்லை காரணமாக கோழிக்கோடில் 6 பள்ளிகளுக்கு விடுமுறை

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூத்தாலி ஊராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் செல்பவர்களை அது துரத்தி சென்று கடித்தபடி இருந்தது.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4 பேரை தெருநாய்கள் கடித்தன.

இதனால் சாலைகளில் சிறுவர்-சிறுமிகள், மாணவ-மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தெருநாய்கள் தொல்லை தொடர்ந்த படி இருந்ததால் கூத்தாலி பகுதியில் 6 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த மாதம் கண்ணூரில் 9 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியது. அதேபோல் வீட்டின் முன் விளையாடிய ஒரு குழந்தையை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து இழுத்துச் சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x