Published : 12 Jul 2023 04:10 AM
Last Updated : 12 Jul 2023 04:10 AM

கல்விக்கூடங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு கட்டாயம்: ஆய்வு கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தல்

கல்விக் கூடங்கள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சட்டம், ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் எப்பொழுதுமே தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலேயே நமது மாநிலத்தில்தான் பெண் குழந்தைகள் அதிகமாகப் பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று வருகிறார்கள். அதேபோல வேலைக்குச் செல்லும் பெண்களும் நாட்டிலேயே நமது மாநிலத்தில்தான் அதிகமாக இருக்கிறார்கள்.

கல்விக் கூடங்கள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது நமது தலையாய கடமையாகும். பொதுமக்கள் மற்றும் பெண்களிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் இருவரும் நான் தெரிவித்துள்ள அறிவுரைகள் அனைத்தும், விடுதலின்றி மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x