இந்திய வளர்ச்சிக்கு 5 கொள்கைகள்: 30 லட்சம் மாணவர்களுக்கு பிரதமர் கடிதம்

இந்திய வளர்ச்சிக்கு 5 கொள்கைகள்: 30 லட்சம் மாணவர்களுக்கு பிரதமர் கடிதம்
Updated on
1 min read

சென்னை: இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு 5 கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 30 லட்சம் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

ஆண்டுதோறும் இறுதித் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கி கலந்துரையாடுவார். இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு 5 கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மேற்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் தாய்மொழியில் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம்: வளர்ச்சியடைந்த பாரதத்தின் இலக்கு, அடிமை சிந்தனையை அறவே நீக்குதல், நம் பாரம்பரியத்தை கொண்டாடுதல், ஒற்றுமையை உறுதி செய்தல், கடமைகளில் கவனம் செலுத்துதல் ஆகிய 5 கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள 30 லட்சம் மாணவர்களுக்கு பிரதமர் மோடி தனது கைப்பட கடிதம் எழுதி கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார். இதில் தமிழகத்தை சேர்ந்த 1 லட்சம் மாணவர்களும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த 6 லட்சம் மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

நாட்டுப்பற்றை உருவாக்கும் வகையில் கடிதம் அமைந்துள்ளது. அத்துடன், பிரேம்போட்டு வீட்டில் மாட்டிவைத்துக் கொள்ளும் வகையில் சிறந்த வடிவமைப்புடன்கூடிய ஒரு சான்றிதழும் இணைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in