

பாட்டி: அந்த நோட்டு மறந்த கதையை மறுபடியும் இப்போது பேசுவோம்.
இசை: ஏன் பாட்டி?
பாட்டி: அதுல இன்னும் சில விஷயங்கள் இருக்குது.
உமையாள்: அது என்ன?
பாட்டி: வீட்டை விட்டு கிளம்பும் போது, அக்கா உனக்கு ஞாபகப்படுத்தினாள் தானே.
இனியன்: ஆமாம் பாட்டி.
பாட்டி: அக்கா சொல்லியிருந்ததை நீ கேட்டிருந்தால், நீ திட்டு வாங்கியிருக்க மாட்டேல்ல.
இனியன்: அது உண்மை தான்.
பாட்டி: இப்போ நான் சொன்ன இந்த வாக்கியத்திற்கு Third conditional statement என்று பெயர்.
மித்ரன்: அப்படியா.
உமையாள்: இன்னும் கொஞ்சம் விளக்குங்களேன்.
பாட்டி: அந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது இல்லையா?
மித்ரன்: ஆமாம்.
பாட்டி: அப்படியென்றால், அந்த நேரம் கடந்து விட்டது என்று சொல்லலாமா?
இசை: சொல்லலாமே. நேற்றே நடந்து விட்டது. Past tense.
பாட்டி: அதை இனிமேல் போய் மாற்ற முடியுமா?
உமையாள்: முடியவே முடியாது.
இனியன்: திட்டு வாங்கினது வாங்கினது தான்.
பாட்டி: அந்த சம்பவத்தை மாற்றி செய்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் வடிவம் தான் Third conditional statement.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்