

பாட்டி: கற்பனையில் வரும் conditional statement ஐ நேற்று பார்த்தோம் இல்லையா?
இசை: ஆமாம் பாட்டி. கற்பனையாக ஒன்று நடந்தால், அதை எப்படி ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்று சொல்லி கொடுத்தீங்க.
இனியன்: அதற்கு பெயர் second conditional statement.
பாட்டி: கற்பனை என்பது உண்மையற்ற நிலை என்பது புரியுதா?
உமையாள்: நல்லாவே புரியுது பாட்டி.
பாட்டி: இங்கு, இந்த கற்பனையின் முடிவு, அந்த உண்மையற்ற நிலைக்கு தொடர்புடையதாக, சாத்தியமுள்ளதாக இருக்க வேண்டும்.
மித்ரன்: புரியலையே பாட்டி.
பாட்டி: உனக்கு இறக்கை இருந்தால் நீ என்ன செய்வாய் என்று சொல்ல முடியுமா?
இனியன்: எனக்கு இறக்கை இருந்தால் நான் பறப்பேன்.
பாட்டி: உனக்கு இறக்கை இருந்தால் நீச்சல் அடிப்பாய் என்று நான் சொன்னால் நீ என்ன செய்வாய்?
இனியன்: சத்தமாக சிரிப்பேன் பாட்டி. அதெப்படி இறக்கை இருந்தால் நீச்சல் அடிக்க முடியும். பறக்க தான் முடியும்.
உமையாள்: இறக்கை இருந்தால் பறப்பேன் என்பது சாத்தியமான முடிவு.
பாட்டி: மனிதர்களுக்கு இறக்கை முளைப்பது என்பது கற்பனை.
இனியன்: ஆமாம்.
பாட்டி: ஒரு கற்பனையை காணும் போது, அதன் முடிவு கற்பனையை ஒட்டி சாத்தியமானதாக இருக்க வேண்டும்.
உமையாள்: சாத்தியம் இல்லாததை இங்கு கொண்டு வரக் கூடாது.
இசை: கற்பனையோடு தொடர்பு உடையதால், past tense இல் conditional clause statement இருக்க வேண்டும் என்றும் நேற்று சொன்னீங்க..
பாட்டி: ஆமாம். அது மிக முக்கியமான rule.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்