Published : 22 Jan 2024 03:34 AM
Last Updated : 22 Jan 2024 03:34 AM

ப்ரீமியம்
ராதாபுரம் போல அறிவாயுதம் ஏந்துவோம்

அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம் என்ற நிலையை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பன்முகத்திறனை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் அமைக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மு.அப்பாவு, தனது தொகுதியில் உள்ள 303 அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் அமைக்க ஏற்பாடு செய்தார். இதற்காக பல்வேறு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி பெறப்பட்டது. இத்திட்டத்தின் பலன் குறித்து பாளையங்கோட்டையில் உள்ள செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி ஆய்வு நடத்தியது. இதில், அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு, எழுத்து, பேச்சு, பாடங்கள் கவனிப்பு ஆகியவற்றின் திறன் கணிசமாக மேம்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x