Published : 21 Jul 2023 04:10 AM
Last Updated : 21 Jul 2023 04:10 AM

ப்ரீமியம்
பாடப்பிரிவு தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்

பிளஸ் 1-ல் தான் கேட்ட பாடப்பிரிவை பள்ளி தரக்கோரி சென்னையைச் சேர்ந்த மாணவி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பெரும்பாக்கத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 10-ம் வகுப்பில் 377 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார். எதிர்காலத்தில் ஆடிட்டர் ஆக கனவு கண்ட அந்த மாணவி பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்காக பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியலுடன் கூடிய கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடப்பிரிவை கேட்டார். ஆனால், நல்ல மதிப்பெண் எடுத்ததால் அவருக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை பள்ளி வழங்கியுள்ளது.

தான் விரும்பிய குரூப் கிடைக்காதது மட்டுமல்லாது கொடுக்கப்பட்ட குரூப்பை படிப்பதிலும் மாணவிக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகியவர் பாடப்பிரிவு மாற்றி தரக் கோரினார். ஆனால் பள்ளி தலைமை ஆசிரியர் மறுத்துவிட்டர். இதனால் விரக்தியடைந்த மாணவி பள்ளி வளாகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸ் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மாணவி கேட்ட பாடப்பிரிவை அளிப்பதாக பள்ளி கூறியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x