Published : 23 Nov 2022 06:03 AM
Last Updated : 23 Nov 2022 06:03 AM

டிசம்பரில் தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி

சென்னை: தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா தொழில் பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இம்முறை 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் துறைசார் அரங்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த பொருட்காட்சியில் பொழுது போக்கு அம்சங்களுடன் சிறுவர்களை கவரும் வகையில் பல புதிய விளையாட்டு சாதனங்கள், ராட்சத ராட்டினங்கள், சிறுவர் ரயில் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன.

அரசு செயல்படுத்தி வரும் சிறப்புத் திட்டங்கள் பொது மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அரசின் அரங்குகள் அமையும். டிசம்பர் 25 முதல் 30-ம் தேதிக்குள் பொருட்காட்சி தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x