Published : 21 Nov 2022 06:12 AM
Last Updated : 21 Nov 2022 06:12 AM

ப்ரீமியம்
குழந்தைகளின் பயணக் கல்வி முறை

ஆண்டு முழுவதும் மாணவர்கள் வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திற்குள் தான் கற்றுக் கொண்டே இருக்க முடியுமா? பள்ளிக்கு வெளியே கற்றுக்கொள்ள, ஆய்வு செய்ய, அனுபவம் பெற, செயல் விளக்கம் பெற, செய்து பார்க்க, புள்ளி விவரங்கள் திரட்ட, உற்பத்தி சார்ந்த இடங்கள், தொழிலகம், சேவை மையம், சமூக பணி செய்ய எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் அவர்களால் பள்ளிக்கு வெளியே செல்ல முடியாதபடி கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் கால்களைக் கட்டிப் போட்டு உள்ளது.

பள்ளிக்கு வெளியே மாணவர்கள் ஒரு கல்வியாண்டில் செல்வது என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்கள் தான். சுற்றுலா என்றால் ஐயோ... ஆளை விடுங்கள் என்று கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பின்வாங்கி விடுகிறார்கள். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால் நம் தலை உருளும் என்று அஞ்சி ஒதுங்கி விடுகிறார்கள். சுற்றுலா என்பது இன்றும் பரவலாக மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. சுற்றுலா செல்வது ஓர் கல்வி சார் நடவடிக்கை தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x