Published : 31 Oct 2022 06:12 AM
Last Updated : 31 Oct 2022 06:12 AM
கதை புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமுள்ள மாணவர்கள் எல்லோருமே ”கதை புத்தகம் படிக்கிற நேரத்துல பாடப் புத்தகத்தைப் படிக்கலாமே?” என்று பெற்றோர் அல்லது உறவினர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அப்படிக் கேள்விக் கேட்பவர்களெல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதுபோல, பொழுதுபோக்கத்தான் கதைகள் படிப்பது என்றே எண்ணக்கூடியவர்கள். அடிக்கடி அந்தக் கேள்வியை எதிர்கொள்ளும்போது நமக்குமே அப்படியான ஓர் எண்ணம் வந்துவிடலாம். உண்மையில், கதைகள் படிப்பதும்; சொல்வதும் பல்வேறு பயன்களைத் தரக்கூடியதே. ஒருவகையில் மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவதற்கும் கதைகள் உதவும். பாடங்களைப் படிக்கும்போது அதிலிருந்து கேள்விகள் கேட்கப்படும் என்ற எண்ணம் வந்துகொண்டே இருக்கும். குறிப்பிட்ட ஒன்றை நேரடியாகக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற முடிவில் பாடங்கள் எழுதப்பட்டிருப்பதால் சுவையும் சுவாரஸ்யமும் இருக்காது. அதனால், அப்புத்தகங்கள் மீதான ஈர்ப்பு முழுமையானதாக இருக்காது. ஏனெனில், இதை நினைவில் வைத்திருக்க வேண்டுமே என்ற அச்சம்கூடவே வந்துகொண்டிருக்கும். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது கதைகள் வாசிப்பது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT