செப்.19, 20 - தேதிகளில் பிஇஓ பணிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

செப்.19, 20 - தேதிகளில் பிஇஓ பணிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு
Updated on
1 min read

சென்னை: தொடக்கக் கல்வி சார்நிலைப்பணியில் வட்டார கல்வி அதிகாரி (பிஇஓ) பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், நேரடி நியமனமுறையிலும் நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் காலியிடங்களுக்கு தகுதிவாய்ந்த அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலை தொடக்கக்கல்வி இயக்ககம் அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில் 357 பேர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், வட்டார கல்வி அதிகாரி பணிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தொடக்கக் கல்வி இயக்ககத்தில் செப்டம்பர் 19, 20-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் தங்கள் முன்னுரிமை எண் வரிசைப்படி கலந்தாய்வில் தவறாமல்பங்கேற்குமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி அறிவுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in