Published : 31 Dec 2021 08:04 AM
Last Updated : 31 Dec 2021 08:04 AM

மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள்?

சென்னை

கரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகள், நவம்பர் 1-ம் தேதி திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தற்போது மாணவர்களுக்கு அரையாண்டு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது முழுநேர வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் இது அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதையடுத்து, சுழற்சி முறை வகுப்புகளையே தொடர்வதற்கு பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்வதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சுழற்சி முறையிலான வகுப்புகளையே தொடரத் திட்டமிட்டுள்ளோம். மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து, உரிய முடிவுகள் மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x