Published : 05 Dec 2021 04:06 AM
Last Updated : 05 Dec 2021 04:06 AM

போட்டித் தேர்வு எழுதுவோர் பங்கேற்கலாம் ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி: ஆன்லைனில் இன்று நடைபெறுகிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி இன்று (ஞாயிறு) காலை11 மணிக்கு ஆன்லைனில் நடைபெறுகிறது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுஎழுத அடிப்படை கல்வித் தகுதி, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதற்கு என்ன செலவாகும் என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களுக்கு, தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி இன்று காலை 11 முதல் மதியம் 1 மணி வரை ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள துலேமாவட்ட ஜில்லா பரிஷத் தலைமைநிர்வாக அதிகாரி சி.வான்மதி, ஐஏஎஸ், சங்கர் ஐஏஎஸ் அகாடமிஇயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற உள்ளனர்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் http://www.htamil.org/00149 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ இணைந்து நடத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x