Published : 22 Nov 2021 10:20 AM
Last Updated : 22 Nov 2021 10:20 AM

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் தொடங்கின: முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எப்போது?

கோப்புப் படம்

சென்னை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று மற்றும் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டுவந்தது.

நாடு முழுவதும் 18 வயதிற்கும் மேலுள்ள நூறு கோடிக்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் மூலம், தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் கரோனா வழிகாட்டுதலின்படி, நடைபெற தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இன்றில் இருந்து ஜனவரி மாதம் வரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்திற்கு பிறகு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x